Design a site like this with WordPress.com
Get started

திவ்யப்ரபந்தம்

  • எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே

    ஜீவர்களாகிய நாம் அநாதியான கர்மப்ரவாஹத்தாலும், ப்ரக்ருதி ஸம்பந்தத்தாலும் ஸம்ஸாரம் என்னும் கொடியதானதொரு பாலை நிலத்தில் கிடந்து உழல்கின்றோம். ப்ரக்ருதி ஸம்பந்தம் விரோதம் மட்டுமல்லாமல் அற்பமானது, “மின்னின் நிலையில, மன்னுயிர் ஆக்கைகள்” என்று அலற்றுகிறார் ஆழ்வார். ஸ்வாமி தேசிகனோ இந்த ஸம்பந்தத்தினால் துன்புற்றுழலும் சேதனர்களை “ஆவாரார் துணையென்று அலைநீர்க்கடலுள் அழுந்தும் நாவாய்போற் பிறவிக் கடலுள் நின்று துளங்குகின்றவர்” என்கிறார். அந்த ஸம்பந்தத்தை ஒழித்து, எம்பெருமானிடம் பிறப்பின்மை வேண்டி மோக்ஷம் அடையப் ப்ரார்த்திப்பதே சேதனர்களின் ஸ்வரூபத்திற்குப் பாங்கு. “பாலேபோல் சீரில்… Continue reading

  • தேனே மலரும் திருப்பாதம்!

    அந்நாளில் த்ரிவிக்ரமனாய் உயர்ந்து மூவுலகையும் அளந்து தன் சர்வசக்தித்வத்தை நிர்தாராணம் பண்ணினான் பெருமான். அவ்வல்லமையைக் கண்டு மோஹித்த  ஆண்டாள் ஓங்கி உலகளந்த உத்தமன், அம்பர மூடறுந்தோங்கி உலகளந்த உம்பர் கோமான், அன்று இவ்வுலகம் அளந்தாய் என்று அவன் திருவடியின் மேன்மையை திருப்பாவையில் மீண்டும் மீண்டும் அநுபவிக்கிறாள். ஸ்வாமி நம்மாழ்வாரோ “ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்று அடியவர்களை ஆட்கொண்டு ரக்ஷிக்க எம்பெருமான் உபாயமாக தன் திருவடியையே தந்தருளுகிறான் என்று அத்திருவடி தொழுதெழுகிறார். வானவர்களின் தலையை அலங்கரிக்கும்… Continue reading

  • இந்நின்ற நீர்மை இனியாம் உறாமல் உயிர் அளிப்பான் பெருமான்

    “பயனன்றாகிலும் பாங்கலராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்” என்ற ஸ்வாமி மதுரகவியாழ்வார் திருவாக்குப்படி தம் அருளிச்செயல்கள் மூலம் தீர்ந்த அடியவர்களைத் திருத்தி எம்பெருமானிடத்தில் பணிகொள்ள வைப்பதையே ஸ்வாமி நம்மாழ்வார் தன் திருவவதார வைபவத்தின் தலையாய கர்தவ்யமாகக் கொண்டார்.  ஸம்ஸார பந்தத்தில் கட்டுண்டு ஜீவன்கள் படும் அவஸ்த்தையானது ஆழ்வார் திருவுள்ளத்திற்க்கு எவ்வளவு அஸஹ்யமாய் இருக்கிறதென்பதை தன் முதல் ப்ரபந்தமான திருவிருத்தத்தின் முதல் பாசுரத்தின் மூலம் தமது ஞானக்கண்ணுக்கு இலக்கான எம்பெருமானிடம் “தேவரீரை அநுபவிக்கைக்கு விரோதியான தேஹசம்பந்தத்தைப் போக்கியருள… Continue reading

Recent Posts

அம்ருதரஞ்சனி அம்ருதாஸ்வாதினி அர்ச்சாவதாரம் ஆராதனை இராமானுஜ நூற்றந்தாதி இராமாயணம் இளையபெருமாள் கண்ணிநுண் சிறுத்தாம்பு காவேரி கைங்கர்யம் சரணாகதி தீபிகா திருமலை திருவாய்மொழி திருவிருத்தம் திருவேங்கடவன் திவ்யப்ரபந்தம் தேசிகஸ்தோத்ரம் தேவநாயக பஞ்சாசத் தேவப்பெருமாள் நம்பையல் ந்யாஸதசகம் ந்ருஸிம்ஹன் ராமாயணம் வரதராஜஸ்தவம் ஸ்ரீ தேஹளீச ஸ்துதி ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம் ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீ யதிராஜஸப்ததி ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்