தொடர்
-
வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்
இப்பூவுலகில் ஸம்ஸாரமென்னும் கொடியதான பாலை நிலத்தில் கட்டுண்டு அவஸ்தைப் படும் சேதனர்களைத் தன் குளிர்ந்த கடாக்ஷத்தால் நனைத்து உஜ்ஜீவிக்க திருவுள்ளம் கொண்ட எம்பெருமான், பல க்ஷேத்ரங்களில் அர்ச்சாமூர்த்தியாய் எழுந்தருளி எல்லோருக்கும் பொதுவாய் நின்று, நாம் பற்றுவதற்கு ஹேதுவாய், ப்ரத்யமக்ஷமாய் இன்றளவும் ஸேவை ஸாதித்துக் கொண்டிருக்கிறான். எம்பெருமானின் இந்த அர்ச்சா திருமேனியில் ஈடுபட்டு அவனருளிய மயர்வற மதிநலம் கொண்டு “திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன்” போன்ற இன்கவிகள் பாடியருளி, அவன் திருமேனி அழகுக்கு மேலும் மெருகூட்டினர் பரமகவிகளான நம்… Continue reading
-
வேம்பின்புழு வேம்பன்றி உண்ணாது
பொதுவாக எம்பெருமானின் இனிமைக்கு கரும்பையும் அதன் ரஸத்தையும் ஒரு த்ருஷ்டாந்தமாக இட்டுக் கூறுவது வழக்கம். “தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பு” என்று கலியன் கரும்பை எம்பெருமானுக்கு உவமையாக்கியதும், ஸ்வாமி தேசிகன் தேஹளீசஸ்துதியில் திருக்கோவலூர் எம்பெருமானான நெடுமாலை பெண்ணை ஆற்றங்கரையில் விளைந்த கரும்பு என்றும் அவன் திவ்யமங்கள அநுபவம் கருப்பஞ்சாறு போன்றது என்று கொண்டாடியதும் இங்கே அநுஸந்திக்கத்தக்கது. காஸாரபூர்வகவிமுக்யவிமர்த்தஜந்மா பண்ணாதடேக்ஷூஸுபகஸ்ய ரஸோ பஹூஸ்தே | த்வத்பாதபத்மமதுநி த்வதநந்யபோக்யே நூநம் ஸமாச்ரயதி நூதநசர்க்கராத்வம் || தேஹளீசஸ்துதி-7 அப்படியிருக்க “பெரிய… Continue reading
-
வினை தீர்க்கும் திருவேங்கட மாமலை – 3
திருவேங்கடவன் எண்ணற்ற திருக்கல்யாண குணங்களை உடையவனாயிருப்பினும் அவனுடைய மற்ற குணங்களனைத்தும் தரம் பெறுவது அவன் தயையாலேயே என்பதனை “தயா சதகம்” என்னும் ஸ்தோத்ரத்தின் மூலம் ஸ்வாமி தேஶிகன் நிர்தாரணம் பண்ணுகிறார். அப்பேற்பட்ட தயையே ஒரு மலை வடிவம் கொண்டுள்ளது என்று இவ்வாறு ரஸோக்தியாக அருளிச் செய்கிறார் நம் ஆசார்ய வள்ளல்: ப்ரபத்யே தம் கிரிம் ப்ராய: ஸ்ரீநிவாஸாநுகம்பயா | இக்ஷுஸாரஸ்ரவந்த்யேவ யந்மூர்த்யா ஷர்கராயிதம் || ஸ்ரீ தயாசதகம் – 1 அடியார்களிடத்தில் தங்கு தடையின்றி வெள்ளமிட்டு ஓடும்… Continue reading
-
வினை தீர்க்கும் திருவேங்கட மாமலை – 2
எம்பெருமான் திருமலையில் ஏன் எழுந்தருளினான் என்று முதற் பகுதியில் பார்த்தோம். இவ்வாறு அவனுகந்த, அவனுக்குப் பரமப்ராப்யமான திருமலைதான் நமக்கும் பரம ப்ராப்யம்; ஆதலால் அனைவரும் திருவேங்கட மாமலையைச் சென்றடைந்து அம்மலையையே உபாயமாகப் பற்றுங்கோள் என்று ஸாதிக்கிறார் நம் குருகூர்ச் சடகோபன். குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் சென்றுசேர் திருவேங்கட மாமலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே. திருவாய்மொழி 3-3-8 கிருஷ்ணாவதாரத்தில் கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கி நின்று குளிர்ந்த… Continue reading
-
வினை தீர்க்கும் திருவேங்கட மாமலை – 1
பரமபதத்திலே கைங்கர்யஸாம்ராஜ்யத்திற்கு அதிபதியாய் இருப்பினும் தன் பரத்வ ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு தன்னைச் சரணடையும் சேதனர்களின் மேல் கொண்ட எல்லையில்லா பக்ஷபாதத்தினால் தயையே திருவுள்ளமாய், அவர்கள் பற்றுவதற்கு ஹேதுவாய் நித்ய விபூதியில் இருந்து இர(ற)ங்கி வந்து அர்ச்சாவதாரமாக மண்ணுலகில் நித்யவாஸம் பண்ண திருவுள்ளம் கொண்டான் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன். கலியுகத்தின் ப்ரத்யக்ஷ தெய்வமாய் அர்ச்சாரூபமாய் முதன் முதலாக திருமலையில் ஸ்ரீநிவாஸனாக எழுந்தருளினான். கங்கையும் அதனிற் புனிதமான காவிரிக் கரையும் மற்றும் பல புண்ய நதிக் கரைகளும், செழிப்பான வனங்களும்,… Continue reading
-
பெண்ணை ஆற்றங்கரைக் கரும்பு
இடம் : திருக்கோவலூர் வைபவம்: இடைகழியில் முதலாழ்வார்கள் ஏற்றிவைத்த விளக்கு ஸ்லோகம்: தேஹளீச ஸ்துதி முதலாழ்வார்களின் திருக்கோவலூர் வைபவம் அனைவரும் அறிந்ததே. இவ்வைபவத்தை ஸ்வாமி தேசிகன் “ஸ்ரீ தேஹளீச ஸ்துதி”யில் கவி நயத்துடன் கொண்டாடுகிறார். அதில் ஒரு ஸ்லோகம்: காஸாரபூர்வகவிமுக்யவிமர்த்தஜந்மா பண்ணாதடேக்ஷூஸுபகஸ்ய ரஸோ பஹூஸ்தே | த்வத்பாதபத்மமதுநி த்வதநந்யபோக்யே நூநம் ஸமாச்ரயதி நூதநசர்க்கராத்வம் || ஸ்ரீ தேஹளீச ஸ்துதி – 7 “ஆற்றின் கரையில் பயிராகிச் செழித்த கரும்பை ஆலையில் இட்டுப் பிழிந்து எடுக்கும் சாறானது மிக… Continue reading
Recent Posts
- எம்பெருமானிடத்தில் நாம் செய்யும் களவு
- எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே
- வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்
- இதயத்திருள்கெட இடைகழியில் ஏற்றிய விளக்கு
- வேம்பின்புழு வேம்பன்றி உண்ணாது
அம்ருதரஞ்சனி அம்ருதாஸ்வாதினி அர்ச்சாவதாரம் ஆராதனை இராமானுஜ நூற்றந்தாதி இராமாயணம் இளையபெருமாள் கண்ணிநுண் சிறுத்தாம்பு காவேரி கைங்கர்யம் சரணாகதி தீபிகா திருமலை திருவாய்மொழி திருவிருத்தம் திருவேங்கடவன் திவ்யப்ரபந்தம் தேசிகஸ்தோத்ரம் தேவநாயக பஞ்சாசத் தேவப்பெருமாள் நம்பையல் ந்யாஸதசகம் ந்ருஸிம்ஹன் ராமாயணம் வரதராஜஸ்தவம் ஸ்ரீ தேஹளீச ஸ்துதி ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம் ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீ யதிராஜஸப்ததி ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்