-
எம்பெருமானிடத்தில் நாம் செய்யும் களவு
ஒரு பொருளை உடையவனின் ஜ்ஞானமும் அனுமதியும் இல்லாமல் எடுத்து வந்து அதை எந்த வித ஸங்கோசமுமின்றி அது நம்முடையது என்கிற பாவத்தில் உபயோகிப்பதே களவு எனப்படும். எம்பெருமான் தங்கள் இதயத்தை களவு கொண்டு போனதாக பராங்குச-பரகால நாயகிகள் அலற்றுவதை நாம் பல பாசுரங்களில் அநுபவித்து இருக்கிறோம். ஸ்வாமி தேசிகனோ இங்கே வேறொரு விதமான, ஒரு நூதனமான திருட்டைப் பற்றிப் பேசுகிறார். அவர் கூற்றுப்படி நாம் அனைவரும் திருடர்களே. நாமும் ஒரு பொருளை திருடிக்கொண்டு வந்து எந்தவித வெட்கமோ … Continue reading
-
எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே
ஜீவர்களாகிய நாம் அநாதியான கர்மப்ரவாஹத்தாலும், ப்ரக்ருதி ஸம்பந்தத்தாலும் ஸம்ஸாரம் என்னும் கொடியதானதொரு பாலை நிலத்தில் கிடந்து உழல்கின்றோம். ப்ரக்ருதி ஸம்பந்தம் விரோதம் மட்டுமல்லாமல் அற்பமானது, “மின்னின் நிலையில, மன்னுயிர் ஆக்கைகள்” என்று அலற்றுகிறார் ஆழ்வார். ஸ்வாமி தேசிகனோ இந்த ஸம்பந்தத்தினால் துன்புற்றுழலும் சேதனர்களை “ஆவாரார் துணையென்று அலைநீர்க்கடலுள் அழுந்தும் நாவாய்போற் பிறவிக் கடலுள் நின்று துளங்குகின்றவர்” என்கிறார். அந்த ஸம்பந்தத்தை ஒழித்து, எம்பெருமானிடம் பிறப்பின்மை வேண்டி மோக்ஷம் அடையப் ப்ரார்த்திப்பதே சேதனர்களின் ஸ்வரூபத்திற்குப் பாங்கு. “பாலேபோல் சீரில்… Continue reading
-
வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்
இப்பூவுலகில் ஸம்ஸாரமென்னும் கொடியதான பாலை நிலத்தில் கட்டுண்டு அவஸ்தைப் படும் சேதனர்களைத் தன் குளிர்ந்த கடாக்ஷத்தால் நனைத்து உஜ்ஜீவிக்க திருவுள்ளம் கொண்ட எம்பெருமான், பல க்ஷேத்ரங்களில் அர்ச்சாமூர்த்தியாய் எழுந்தருளி எல்லோருக்கும் பொதுவாய் நின்று, நாம் பற்றுவதற்கு ஹேதுவாய், ப்ரத்யமக்ஷமாய் இன்றளவும் ஸேவை ஸாதித்துக் கொண்டிருக்கிறான். எம்பெருமானின் இந்த அர்ச்சா திருமேனியில் ஈடுபட்டு அவனருளிய மயர்வற மதிநலம் கொண்டு “திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன்” போன்ற இன்கவிகள் பாடியருளி, அவன் திருமேனி அழகுக்கு மேலும் மெருகூட்டினர் பரமகவிகளான நம்… Continue reading
-
இதயத்திருள்கெட இடைகழியில் ஏற்றிய விளக்கு
வேதங்களின் சிரோபாகமான உபநிடதங்களை (ச்ருதீநாமுத்தரம் பாகம்) ஆதாரமாகக் கொண்டு ஸ்ரீவ்யாஸபகவான் ப்ரஹ்மஸூத்ரத்தில் பக்தி-ப்ரபத்தி என்ற இரு உபாயங்களால் எம்பெருமானை அடையலாம் என்று காட்டினார். அவர் காட்டிய இவ்வழியே நல்வழி என்று பரமதபங்கத்தில் ஸ்வாமி தேசிகன் ஸ்தாபிக்கிறார். வையமெலாம் இருள் நீக்கு மணிவிளக்காய் மன்னிய நான்மறைமௌலி மதியே கொண்டு மெய்யலது விளம்பாத வியாசன் காட்டும் விலக்கில்லா நல்வழியே விரைந்து செல்வீர் || (பரமதபங்கம் – 52) என்றபடி வேதாந்தம் “ரத்னதீபமாய்” நின்று உலகிலுள்ள அஜ்ஞானமாகிய இருளைப் (பொய் நின்ற… Continue reading
-
வேம்பின்புழு வேம்பன்றி உண்ணாது
பொதுவாக எம்பெருமானின் இனிமைக்கு கரும்பையும் அதன் ரஸத்தையும் ஒரு த்ருஷ்டாந்தமாக இட்டுக் கூறுவது வழக்கம். “தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பு” என்று கலியன் கரும்பை எம்பெருமானுக்கு உவமையாக்கியதும், ஸ்வாமி தேசிகன் தேஹளீசஸ்துதியில் திருக்கோவலூர் எம்பெருமானான நெடுமாலை பெண்ணை ஆற்றங்கரையில் விளைந்த கரும்பு என்றும் அவன் திவ்யமங்கள அநுபவம் கருப்பஞ்சாறு போன்றது என்று கொண்டாடியதும் இங்கே அநுஸந்திக்கத்தக்கது. காஸாரபூர்வகவிமுக்யவிமர்த்தஜந்மா பண்ணாதடேக்ஷூஸுபகஸ்ய ரஸோ பஹூஸ்தே | த்வத்பாதபத்மமதுநி த்வதநந்யபோக்யே நூநம் ஸமாச்ரயதி நூதநசர்க்கராத்வம் || தேஹளீசஸ்துதி-7 அப்படியிருக்க “பெரிய… Continue reading
-
வினை தீர்க்கும் திருவேங்கட மாமலை – 3
திருவேங்கடவன் எண்ணற்ற திருக்கல்யாண குணங்களை உடையவனாயிருப்பினும் அவனுடைய மற்ற குணங்களனைத்தும் தரம் பெறுவது அவன் தயையாலேயே என்பதனை “தயா சதகம்” என்னும் ஸ்தோத்ரத்தின் மூலம் ஸ்வாமி தேஶிகன் நிர்தாரணம் பண்ணுகிறார். அப்பேற்பட்ட தயையே ஒரு மலை வடிவம் கொண்டுள்ளது என்று இவ்வாறு ரஸோக்தியாக அருளிச் செய்கிறார் நம் ஆசார்ய வள்ளல்: ப்ரபத்யே தம் கிரிம் ப்ராய: ஸ்ரீநிவாஸாநுகம்பயா | இக்ஷுஸாரஸ்ரவந்த்யேவ யந்மூர்த்யா ஷர்கராயிதம் || ஸ்ரீ தயாசதகம் – 1 அடியார்களிடத்தில் தங்கு தடையின்றி வெள்ளமிட்டு ஓடும்… Continue reading
-
வினை தீர்க்கும் திருவேங்கட மாமலை – 2
எம்பெருமான் திருமலையில் ஏன் எழுந்தருளினான் என்று முதற் பகுதியில் பார்த்தோம். இவ்வாறு அவனுகந்த, அவனுக்குப் பரமப்ராப்யமான திருமலைதான் நமக்கும் பரம ப்ராப்யம்; ஆதலால் அனைவரும் திருவேங்கட மாமலையைச் சென்றடைந்து அம்மலையையே உபாயமாகப் பற்றுங்கோள் என்று ஸாதிக்கிறார் நம் குருகூர்ச் சடகோபன். குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் சென்றுசேர் திருவேங்கட மாமலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே. திருவாய்மொழி 3-3-8 கிருஷ்ணாவதாரத்தில் கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கி நின்று குளிர்ந்த… Continue reading
-
வினை தீர்க்கும் திருவேங்கட மாமலை – 1
பரமபதத்திலே கைங்கர்யஸாம்ராஜ்யத்திற்கு அதிபதியாய் இருப்பினும் தன் பரத்வ ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு தன்னைச் சரணடையும் சேதனர்களின் மேல் கொண்ட எல்லையில்லா பக்ஷபாதத்தினால் தயையே திருவுள்ளமாய், அவர்கள் பற்றுவதற்கு ஹேதுவாய் நித்ய விபூதியில் இருந்து இர(ற)ங்கி வந்து அர்ச்சாவதாரமாக மண்ணுலகில் நித்யவாஸம் பண்ண திருவுள்ளம் கொண்டான் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன். கலியுகத்தின் ப்ரத்யக்ஷ தெய்வமாய் அர்ச்சாரூபமாய் முதன் முதலாக திருமலையில் ஸ்ரீநிவாஸனாக எழுந்தருளினான். கங்கையும் அதனிற் புனிதமான காவிரிக் கரையும் மற்றும் பல புண்ய நதிக் கரைகளும், செழிப்பான வனங்களும்,… Continue reading
-
கண்ணனுக்கும் எம்பெருமானாருக்கும் சிலேடை
ஸ்ரீ யதிராஜஸப்ததியின் 13ம் ஸ்லோகத்தில் ஸ்வாமி ராமாநுஜருக்கும் எம்பெருமான் கண்ணனுக்கும் உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்தி கண்ணனே ஸ்ரீபாஷ்யகாரராக திருவவதரித்தான் என்று நிர்தாரணம் பண்ணுகிறார் ஸ்வாமி தேசிகன். ஶமிதோத₃யஶங்கராதி₃க₃ர்வ꞉ஸ்வப₃லாது₃த்₃த்₄ருதயாத₃வப்ரகாஶ: |அவரோபிதவாந் ஶ்ருதேரபார்தா₂ந்நநு ராமாவரஜ꞉ ஸ ஏஷ பூ₄ய꞉ || ஸ்ரீ யதிராஜஸப்ததி -13 “மைந்நம்பு வேல்கண் நல்லாள்முன்னம் பெற்ற வளைவண்ணம் நன்மாமேனி, தன்நம்பி நம்பி” என்றபடி கண்ணபிரான் பலராமனுக்கு தம்பியாதலின் ராமாநுஜன் என்ற திருநாமம் கொண்டான். ஜகதாசார்யரான ஸ்ரீ பாஷ்யகாரருக்கு ராமாநுஜர் என்ற திருநாமம் ப்ரஸித்தம். ஶமிதோத₃யஶங்கராதி₃க₃ர்வ꞉ கண்ணன்,… Continue reading
-
வேங்கடநாதன் அநுபவித்த பரமபதநாதனின் சுநாதங்கள்
கேட்கப்படுவது எதுவோ அதுவே ஶ்ருதி. அபௌருஷேயங்களான வேதத்தைச் ஶ்ருதி எனவும் கூறுவர். இன்றளவும் வேதத்தை எழுதி வைத்துப் படிக்காமல், வாயால் சொல்லி காதால் கேட்டறிந்து ஶ்ரவணம் செய்தே தலைமுறை தலைமுறையாக அநுஸந்தித்து வருகிறோம். கடலுக்குள்ளே முத்துக்கள், பவளங்கள் மற்றும் ரத்னங்கள் போன்ற எண்ணற்ற விலைமதிப்பில்லாத செல்வங்கள் ஒளிந்திருக்கின்றன. அதுபோல பிராட்டியுடன் கூடிய எம்பெருமான் என்னும் திருக்கல்யாணகுணங்களின் கடலுள் மறைகள் மறைந்திருக்கின்றன. அம்மறையின் காரணமாகவும் காரியமாகவும் இருக்கிறான் பெருமான். அதனாலேயே அவனுக்கு ஶ்ருதிஸாகரன் என்ற திருநாமம் வழங்கப்படுகின்றது. தாம்… Continue reading
Recent Posts
- எம்பெருமானிடத்தில் நாம் செய்யும் களவு
- எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே
- வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்
- இதயத்திருள்கெட இடைகழியில் ஏற்றிய விளக்கு
- வேம்பின்புழு வேம்பன்றி உண்ணாது
அம்ருதரஞ்சனி அம்ருதாஸ்வாதினி அர்ச்சாவதாரம் ஆராதனை இராமானுஜ நூற்றந்தாதி இராமாயணம் இளையபெருமாள் கண்ணிநுண் சிறுத்தாம்பு காவேரி கைங்கர்யம் சரணாகதி தீபிகா திருமலை திருவாய்மொழி திருவிருத்தம் திருவேங்கடவன் திவ்யப்ரபந்தம் தேசிகஸ்தோத்ரம் தேவநாயக பஞ்சாசத் தேவப்பெருமாள் நம்பையல் ந்யாஸதசகம் ந்ருஸிம்ஹன் ராமாயணம் வரதராஜஸ்தவம் ஸ்ரீ தேஹளீச ஸ்துதி ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம் ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீ யதிராஜஸப்ததி ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்